Alangara vasalaale
1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம் பாக்கியம்.
2. கர்த்தரே உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும் .
3. பயத்தில் உம்மண்டை சேர ,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்,
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும் .
4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.
5. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நன் பின்செல்லவும் ,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.
6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே;
தாரும் ஜீவ பானத்தை ,
தீரும் பசி தாகத்தை . ஆமேன் .
i want hymnals songs no in tamil lyrics 17,20,23,28,30-35,37-41,49-100
ReplyDeleteSure I will update it 👍🏻
Delete