Wednesday, 13 May 2015

பா:15 அலங்கார வாசலாலே

Alangara vasalaale

1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே 
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம் பாக்கியம்.

2. கர்த்தரே உம்மண்டை வந்த 
என்னண்டைக்கு வாருமேன் 
நீர் இறங்கும்போதனந்த 
இன்பத்தால் மகிழுவேன் 
என்னுட இதயமும் 
தெய்வ ஸ்தலமாகவும் .

3. பயத்தில் உம்மண்டை சேர ,
என் ஜெபம் புகழ்ச்சியும் 
நல்ல பலியாக ஏற 
உமதாவியைக் கொடும்,
தேகம் ஆவி யாவையும் 
சுத்தமாக்கியருளும் .

4. நல்ல நிலத்தில் விழுந்த 
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த 
கனிகளைத் தரவே,
வசனத்தைக் காக்க நீர் 
ஈவளிக்கக் கடவீர்.

5. விசுவாசத்தை விடாமல் 
அதில் பலப்படவும் 
ஒருக்காலும் தவறாமல் 
உம்மை நன் பின்செல்லவும் ,
மெய்வெளிச்சத்தை நீரே 
என்னில் வீசும் கர்த்தரே.

6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன் 
நீர் இப்பாழ் நிலத்திலே 
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன் 
நல்தியானத்துடனே;
தாரும் ஜீவ பானத்தை ,
தீரும் பசி தாகத்தை . ஆமேன் .

2 comments:

  1. i want hymnals songs no in tamil lyrics 17,20,23,28,30-35,37-41,49-100

    ReplyDelete