Wednesday, 13 May 2015

பா:14 அநாதியான கர்த்தரே

Anaadhiyana Karthare

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே 
வானங்களுக்கு மேலாய் நீர் 
மகிமையோடிருக்கிறீர் .

2. ப்ரதான தூதர் உம்முன்னே 
தம் முகம் பாதம் மூடியே 
சாஷ்டாங்கமாகப் பணிவார் 
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால் , தூசியும் 
சாம்பலுமான நாங்களும் 
எவ்வாறு உம்மை அண்டுவோம் ?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில் 
இருப்பதால் வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம் . ஆமேன் .

No comments:

Post a Comment