Anaadhiyana Karthare
1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர் .
2. ப்ரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
'நீர் தூய தூயர்' என்னுவார்.
3. அப்படியானால் , தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம் ?
எவ்விதமாய் ஆராதிப்போம்?
4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம் . ஆமேன் .
No comments:
Post a Comment