Potridu Aanmame
1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை ;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு
சுகமானோரை ;
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
2. போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆழும் பிரானை ;
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை
மறைவில் நம்மை;
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.
3. போற்றிடு காத்துனை ஆசிர்வதிக்கும்
பிரானை;
தேற்றியே தயவால் நிரப்புவார் உன்
வாணாளை;
வாணாளை;
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்பொதெப்பொதும்.
4. போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும் ;
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ
இராசிகள் யாவும்
சபையாரே,
சேர்ந்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன் .
Great..
ReplyDelete