Wednesday, 13 May 2015

பா:9 பூலோகத்தாரே யாவரும் ( All people that on earth do dwell )

Poologathaare yaavarum

1. பூலோகத்தாரே யாவரும் 
கர்த்தாவில் களிகூருங்கள் ,
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் 
செலுத்தி , பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே;
நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே;
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை 
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை 
கொண்டாடி, துதிசெய்யுங்கள் .

4. கர்த்தர் தயாளர் , இரக்கம் 
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் 
மாறாமல் என்றும் நிற்குமே.

5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற 
திரியேக தெய்வமாகிய 
பிதா, குமாரன் , ஆவிக்கும் 
சதா ஸ்துதி உண்டாகவும் . ஆமேன் .
 

No comments:

Post a Comment