Thandhaai Ummai thudhithe
1. தந்தாய் உம்மைத் துதித்தே
உந்தன் நாமம் போற்றுவோமே;
அற்பர் பாவம் யாவுமே
தற்பரா நீர் மன்னிப்பீரே;
தூதரோடும் வேந்தே உம்
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்.
2. வான சேனையாருமே
மோன தூய பக்தரோடும்
கேரூப் சேராப் கோஷ்டிகள்
சேரும் உந்தன் நாமம் போற்ற;
தூய தூயரே, உம்முன்
தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்.
3. தூய வானோர் போற்றிடும்
தூய தூய தூய கர்த்தா ,
மாந்தர் யாரும் பாடிடும்
வேந்தர், மீட்பர், உம் தயாளம்
அன்பு யார்க்கும் ஈவதால்
நன்றியோடு ஏற்றுவோம் .
4. உந்தன் சமாதானமே
எந்தத் தேசம் தன்னில் ஊன்ற
யுத்தம் பகை ஓய்ந்திட
அத்தன் அன்பால் மாந்தர் கூட;
வீழ்வார் உந்தன் பாதமே
தாழ்வார் உந்தன் நாமத்தில்.
5. தந்தை சுதன் ஆவிக்கே
எந்த நாளும் மேன்மை ஸ்துதி ;
ஆதரிக்கும் மூர்த்தியே,
பாதம் வீழ்ந்து சர் நாங்கள்.
அன்பா! உந்தன் மா அன்பை
என்றும் என்றும் ரூபிப்போம் . ஆமேன் .
No comments:
Post a Comment