Wednesday, 13 May 2015

பா:8 தந்தாய் உம்மைத் துதித்தே ( Holy God Thy Name we bless )

Thandhaai Ummai thudhithe

1. தந்தாய் உம்மைத் துதித்தே 
உந்தன் நாமம் போற்றுவோமே; 
அற்பர் பாவம் யாவுமே 
தற்பரா நீர் மன்னிப்பீரே;
தூதரோடும் வேந்தே உம் 
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்.

2. வான சேனையாருமே 
மோன தூய பக்தரோடும்
கேரூப் சேராப் கோஷ்டிகள் 
சேரும் உந்தன் நாமம் போற்ற;
தூய தூயரே, உம்முன் 
தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்.

3. தூய வானோர் போற்றிடும் 
தூய தூய தூய கர்த்தா ,
மாந்தர் யாரும் பாடிடும் 
வேந்தர், மீட்பர், உம்  தயாளம் 
அன்பு யார்க்கும் ஈவதால் 
நன்றியோடு ஏற்றுவோம் .

4. உந்தன் சமாதானமே 
எந்தத் தேசம் தன்னில் ஊன்ற 
யுத்தம் பகை ஓய்ந்திட
அத்தன் அன்பால் மாந்தர் கூட;
வீழ்வார் உந்தன் பாதமே 
தாழ்வார் உந்தன் நாமத்தில்.

5. தந்தை சுதன் ஆவிக்கே 
எந்த நாளும் மேன்மை ஸ்துதி ;
ஆதரிக்கும் மூர்த்தியே,
பாதம் வீழ்ந்து சர் நாங்கள்.
அன்பா! உந்தன் மா அன்பை 
என்றும் என்றும் ரூபிப்போம் . ஆமேன் .

No comments:

Post a Comment