En nenjame nee motchatthai
1. என் நெஞ்சமே , நீ மோட்சத்தை
விரும்பித் தேடி, கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி, என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.
2. நட்சத்திரங்கள், சந்திரன்,
வெம் காந்தி வீசும் சூரியன்,
ஆகாச சேனைகள்,
மின், மேகம், காற்று மாரியே ,
வானங்களின் வானங்களே,
ஒன்றாகப் பாடுங்கள்.
3. விஸ்தாரமான பூமியே,
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,
யெகோவா நல்லவர் .
சராசரங்கள் அனைத்தும்,
அவர் சொற்படி நடக்கும்;
அவரே ஆண்டவர்.
4. பரத்திலுள்ள சேனையே,
புவியிலுள்ள மாந்தரே,
வணங்க வாருங்கள்.
யெகோவாதாம் தயாபரர்,
எல்லாவற்றிற்கும் காரணர்;
அவரைப் போற்றுங்கள். ஆமேன் .
No comments:
Post a Comment