Ellam sishtitha namadhu
1. எல்லாம் சிஷ்டித்த நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக
அல்லேலுயா! மகத்துவம் ,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக ;
பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.
2. மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக ,
அல்லேலுயா ! புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக !
பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.
3. மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும் ,
அல்லேலுயா ! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக;
வான, ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார் ,
அதின்முன் ருசியைத் தாறார் .
4. எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமரன் ஆவிக்கும்
அநந்த காலமாக ,
அல்லேலுயா ! மகத்துவம் ,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக ;
ஆமேன், ஆமேன் !
நீர் அநந்தம் , ஆதியந்தம் ,
பரிசுத்தம் ,
பரிசுத்தம், பரிசுத்தம் . ஆமேன் .
No comments:
Post a Comment