Wednesday, 13 May 2015

பா: 3 உன்னதம், ஆழம், எங்கேயும் (Praise to the Holiest in the height)

Unnadham aazham engeyum

1. உன்னதம் , ஆழம், எங்கேயும் 
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை , செய்கைகள் 
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு ,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்;
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால் 
விழுந்த மாந்தர்தாம் 
ஜெயிக்கத் துணையாயினார் ;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே,
அருளைப் பார்க்கிலும் 
சிறந்த ஏது தாம் என்றே 
ஈந்தாரே தம்மையும் .

5. மானிடனாய் மானிடர்க்காய் 
சாத்தானை வென்றாரே ;
மானிடனாய் எக்கஸ்தியும் 
பட்டர் பேரன்பிதே !

6. கெத்செமெனேயில், குருசிலும் 
வேதனை சகித்தார் ;
நாம் அவர்போன்றே சகித்து 
மரிக்கக் கற்பித்தார்.

7. உன்னதம், ஆழம், எங்கேயும் 
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள் 
மிகுந்த அற்புதம்.  ஆமேன் .

1 comment: