Unnadham aazham engeyum
1. உன்னதம் , ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை , செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
2. பாவம் நிறைந்த பூமிக்கு ,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்;
ஆ, நேச ஞானமே !
3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார் ;
ஆ ஞான அன்பிதாம் !
4. மானிடர் சுபாவம் மாறவே,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும் .
5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே ;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டர் பேரன்பிதே !
6. கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார் ;
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்.
7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம். ஆமேன் .
Salvation in one beautiful song!
ReplyDelete