Wednesday, 13 May 2015

பா:2 உம்மைத் துதிக்கிறோம்

Ummai thudhikkirom

1. உம்மைத்  துதிக்கிறோம், யாவுக்கும்
வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம், ஸ்வாமி,
ராஜாதி ராஜாவே ; 
உமது மா 
மகிமைக்காக, கர்த்தா ,
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே இறங்கும்; சுதனே ,
கடன் செலுத்தி ,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் 
தெய்வாட்டுக்குட்டி ,
எங்கள் மனு 
கேளும்; பிதாவினது
ஆசனத் தோழா, இரங்கும் .

3. நித்ய பிதாவின் மகிமையில் 
இயேசுவே, நீரே 
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே .
ஏகமாய் நீர் 
அர்ச்சிக்கப்படுகிறீர் 
உன்னத கர்த்தரே ஆமேன் .

No comments:

Post a Comment