Wednesday, 13 May 2015

பா:1 ஆத்மமே உன் ஆண்டவரின் ( Praise my soul The King of Heaven )


Aathmame un Aandavarin

1. ஆத்மமே உன் ஆண்டவரின் 
திருப்பாதம் பணிந்து ;
மீட்பு, சுகம், ஜீவன், அருள் 
பெற்றதாலே துதித்து;
அல்லேலுயா, என்றென்றைக்கும் 
நித்ய நாதரைப் போற்று .

2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற 
தயை நன்மைக்காய்த் துதி ;
கோபங்கொண்டும் அருள் ஈயும் 
என்றும் மாறாதோர் துதி ;
அல்லேலுயா, அவர் உண்மை 
மா மகிமையாம், துதி .

3. தந்தைபோல் மா தயை உள்ளோர் ;
நீச மண்ணோர் நம்மையே 
அன்பின் கரம்கொண்டு தாங்கி 
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே ;
அல்லேலுயா , இன்னும் அவர் 
அருள் விரிவானதே .

4. என்றும் நின்றவர் சமூகம் 
போற்றும் தூதர் கூட்டமே ;
நாற்றிசையும் நின்றெழுந்து 
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும் 
அன்பின் தெய்வம் போற்றுமே .    ஆமேன் . 

No comments:

Post a Comment