Wednesday, 13 May 2015

பா: 10 போற்றிடு ஆன்மமே ( Praise to The Lord The Almighty )

Potridu Aanmame

1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி 
கர்த்தாவாம் வல்லோரை ;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு 
சுகமானோரை ;
கூடிடுவோம் 
பாடிடுவோம் பரனை 
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2. போற்றிடு யாவையும் ஞானமாய் 
ஆழும் பிரானை ;
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை 
மறைவில் நம்மை;
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.

3. போற்றிடு காத்துனை ஆசிர்வதிக்கும்
பிரானை;
தேற்றியே தயவால் நிரப்புவார் உன்
வாணாளை;
பேரன்பராம் 
பராபரன் தயவை 
சிந்திப்பாய் இப்பொதெப்பொதும்.

4. போற்றிடு ஆன்மமே, என் முழு 
உள்ளமே நீயும் ;
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ 
இராசிகள் யாவும் 
சபையாரே,
சேர்ந்தென்றும் சொல்லுவீரே 
வணங்கி மகிழ்வாய் ஆமேன் .

1 comment: