Aa Karthaave thaazhmaiyaga
1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப்பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன் நல்ல இயேசுவே ;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன் .
2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே ;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.
3. என் பிரார்த்தனையைக் கேளும்
அத்தியந்த பணிவாய் ;
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய் ;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன். ஆமேன் .
No comments:
Post a Comment