Yevvannamaaga Karthare
1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?
2. அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ய க்ரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?
3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே .
4. நான் குற்றவாளி, ஆகையால்
என் பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.
5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்ய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .
7. இவ்வண்ணமாக, கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன் . ஆமேன் .
No comments:
Post a Comment