Wednesday, 13 May 2015

பா:21 சேனையின் கர்த்தா ( Psalm 84 )

Senaiyin Karthaa !

1. சேனையின் கர்த்தா !
சீர் நிறை யெகோவா !
உம வாசஸ்தலங்களே 
எத்தனை இன்பம் !
கர்த்தனே என்றும் 
அவற்றை வாஞ்சித்திருப்பேன் .

2. ராஜாதி ராஜா !
சேனைகளின் கர்த்தா!
உம பீடம் என் வாஞ்சையே 
உம வீடடைந்தே 
உம்மைத் துதித்தே 
உறைவோர் பாக்யவான்களே .

3. சேனையின் கர்த்தா!
சீர் பெருகும் நாதா !
எம் கேடயமானோரே !
விண்ணப்பம் கேளும் 
கண்ணோக்கிப் பாரும்.
எண்ணெய் வார்த்த உம் தாசனை .

4. மன்னா நீர் சூர்யன் 
என் நற்கேடயமும் ;
மகிமை கிருபை ஈவீர்;
உம் பக்தர் பேறு 
நன்மை அநந்தம் 
உம்மை நம்புவோன் பாக்யவான்.

5. திரியேக தேவே;
மகிமை உமக்கே 
வளமாய் உண்டாகவே !
நித்தியம் ஆளும்,
சதா காலமும் 
உளதாம்படியே ஆமேன் .  ஆமேன் .

5 comments: