Thooya Thooya Thooyaa !
1. தூய தூய தூயா ! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய தூய தூயா ! மூவரான ஏகா !
காருணியரே தூய திரியேகரே !
2. தூய தூய தூயா ! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம்கிரீடம் வைப்பரே ,
கேரூபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாழ்வீர் , அநாதியே !
3. தூய தூய தூயா ! ஜோதி பிரகாசா ,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக்
காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர், மனோ வாக்குக் கெட்டா
மாட்சிமை , தூய்மை , அன்பும் நிறைந்தோர் .
4. தூய தூய தூயா ! சர்வ வல்ல நாதா !
வானம் , பூமி, ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே ;
தூய தூய தூயா ! மூவரான ஏகா !
காருணியரே , தூய திரியேகரே ! ஆமேன் .
No comments:
Post a Comment