Wednesday, 13 May 2015

பா:24 மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் ( O worship the King all glorious above )

Maa Maatchi Karthar Sashtangam Seivom

1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் ,
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் ;
நம் கேடகம் காவல் அனாதியானோர்,
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் .

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ,
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் ;
குமுறும் மின் மேகம் கோப ரதமே ,
கொடும் கொண்டால் காற்றிருள் சூழ் பாதையே .

3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்;
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ;
ஆ, உருக்க தயை ! முற்றும் நிற்குமே ,
மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே .

4. ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே !
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே ,
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும் ,
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும் .  ஆமேன் .

No comments:

Post a Comment