Karthaavai potri paadu
1. கர்த்தாவைப் போற்றிப் பாடு
என் ஆவியே ,என் உள்ளமே ,
தெய்வன்பை நீ கொண்டாடு ,
அதை மறக்கலாகாதே ;
உன் பாவத்தை மன்னித்தார் ,
உன் கேட்டை நீக்கீனார்
உன் பிராணனை ரட்சித்தார் ,
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர் .
2. தாம் ஆளும் நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார் ,
உருக்க தயவாலே
அவர் நிறைந்திருக்கிறார் .
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார் ;மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும் ,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும் ;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
மீறுதல் நீங்கிற்று .
3. தம் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருக்கிரங்குவார் .
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார் ,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார் ;
நாம் புல்லைப் போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம் ;
காற்றதின்மேல் கடந்து
போனால் , உலர்ந்துபோம் .
4. ஆனால் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தெய்வ பயமாய்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்;
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆள்பவர்
யாவற்றின்மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர் .
5. உற்சாக வேகமாக
பண்செய்யும் தேவதூதரே ,
கர்த்தாவை நேர்த்தியாக
துதிப்பதுங்கள் வேலையே ;
வின்மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வித வகையுமாக
துதிப்பதாகவே ;
கர்த்தாவைப் பக்தியாக
துதி, என் ஆவியே . ஆமேன் .
No comments:
Post a Comment