Friday, 15 May 2015

பா:7 கர்த்தாவைப் போற்றிப் பாடு

Karthaavai potri paadu

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு 
என் ஆவியே ,என் உள்ளமே ,
தெய்வன்பை நீ கொண்டாடு ,
அதை மறக்கலாகாதே ;
உன் பாவத்தை மன்னித்தார் ,
உன் கேட்டை நீக்கீனார் 
உன் பிராணனை ரட்சித்தார் ,
குணம் அளிக்கிறார்  
மகா இரக்கமான 
சகாயர் ஆண்டவர் 
ஒடுங்குண்டோருக்கான 
துணை தயாபரர் .

2. தாம் ஆளும் நியாயத்தாலே 
முன்னாள் முதல் வெளிப்பட்டார் ,
உருக்க தயவாலே 
அவர் நிறைந்திருக்கிறார் .
சினத்தை என்றென்றைக்கும் 
வைக்கார் ;மகா தயை 
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும் ,
அது விண்ணத்தனை 
உயர்ந்ததாயிருக்கும் ;
கிழக்கு மேற்குக்கு 
இருக்கும் தூரத்துக்கும் 
மீறுதல் நீங்கிற்று .

3. தம் மைந்தருக்கன்புள்ள 
பிதா இரங்கும்போல் அவர் 
தமக்குப் பயமுள்ள 
சன்மார்க்கருக்கிரங்குவார் .
நாம் இன்ன உருவென்று 
நன்றாக அறிவார் ,
நாம் தூளும் மண்ணுமென்று 
நினைத்திருக்கிறார் ;
நாம் புல்லைப் போல் வளர்ந்து 
பூப்போலே பூக்கிறோம் ;
காற்றதின்மேல் கடந்து 
போனால் , உலர்ந்துபோம் .

4. ஆனால் தாம் நிர்ணயித்த 
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த 
படியே தெய்வ பயமாய் 
செய்தோர்மேல் என்றென்றைக்கும் 
கர்த்தாவின் கிருபை 
நீங்காததாய் நிலைக்கும்;
அவர்கள் நன்மையை 
விசாரிக்கச் சமர்த்தர் 
பரத்தில் ஆள்பவர் 
யாவற்றின்மேலும்  கர்த்தர் 
உயர்ந்த அரசர் .

5. உற்சாக வேகமாக 
பண்செய்யும் தேவதூதரே ,
கர்த்தாவை நேர்த்தியாக 
துதிப்பதுங்கள் வேலையே ;
வின்மண்ணில் எங்குமுள்ள 
மா சேனையாகிய 
எச் சிருஷ்டியும் அன்புள்ள 
கர்த்தாவைச் சகல 
வித வகையுமாக 
துதிப்பதாகவே ;
கர்த்தாவைப் பக்தியாக 
துதி, என் ஆவியே .  ஆமேன் .

No comments:

Post a Comment