Friday, 15 May 2015

பா:4 உன்னதரே நீர் மகிமை ( Gloria in Excelsis Deo )

Unnadhare Neer magimai

1. உன்னதரே நீர் மகிமை ,
இந்நிலம் சமாதானத்தை 
அடைய அன்பு ஒங்க !
பராபரனார் கர்த்தாவே , 
பரம ராஜர் பர்த்தாவே
வல்லமை தந்தாய்  வாழ்க !
தாழ்ந்து வீழ்ந்து ,
போற்றுவோமே புகழ்வோமே 
தொழுவோமே ;
மாட்சிமைக்கென்றும் ஸ்தோத்ரம்.

2. பிதாவின் ஒரே மைந்தனே ,
சுதாவே கர்த்தர் ராஜரே ,
தெய்வாட்டுக்குட்டி நீரே ;
பார் மாந்தர் பாவம் போக்கிடும் ,
மா தந்தை பக்கல் ஆண்டிடும் 
மகத்துவ கிறிஸ்து நீரே;
கேட்பீர் ஏற்பீர் 
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ் 
வாம் வேண்டல் ;
இரங்குவீர் தயவோடே .

3. நீர் தூயர் தூயர் தூயரே ,
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே,
என்றென்றும் ஆள்வீர் நீரே;
பிதாவின் ஆசனத்திலே 
மேதையாய் வீற்றுப் பாங்கினில் 
கர்த்தாவாம் ஆவியோடே ,
இன்றும் என்றும் 
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக 
மேன்மை 
தாங்கி ஆள்வீர் தேவரீரே .   ஆமேன் 

No comments:

Post a Comment