Sunday, 17 May 2015

பா: 135 மகிழ் , கர்த்தாவின் மந்தையே

Magizh karthaavin manthaiye

 1. மகிழ், கர்த்தாவின் மந்தையே ,
இதோ, கெம்பீரத்துடனே 
பரத்துக்குள் அதிபதி 
எழுந்துபோனதால் துதி.

2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் 
கொண்டாடி , மா வணக்கமாய் 
பணிந்து , இயேசு ஸ்வாமிக்கு 
ஆராதனை செலுத்திற்று .

3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு 
தலைவரானார் என்பது 
பரத்தின் தூதருக்கெல்லாம் 
விசேஷித்த சந்தோஷமாம் .

4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே ,
கர்த்தா , பார்த்தா, முதல்வரே .
அடியார் நெஞ்சு உமக்கு 
என்றும் ஆதீனம் ஆனது .

5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே ,
நம் ஆண்டவரை என்றுமே 
அன்பாகக் கூடிப்பாடுங்கள் .
அவரின் மேன்மை கூறுங்கள் .   ஆமேன்

No comments:

Post a Comment