Magizh karthaavin manthaiye
1. மகிழ், கர்த்தாவின் மந்தையே ,
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்துபோனதால் துதி.
2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி , மா வணக்கமாய்
பணிந்து , இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று .
3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம் .
4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே ,
கர்த்தா , பார்த்தா, முதல்வரே .
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது .
5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே ,
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப்பாடுங்கள் .
அவரின் மேன்மை கூறுங்கள் . ஆமேன்
No comments:
Post a Comment