Wednesday, 20 May 2015

பா: 26 நல் மீட்பரே இந்நேரத்தில் ( Sweet Saviour bless us ere we go )

Nal Meetpare Innerathil

1. நல் மீட்பரே இந்நேரத்தில் 
வந்தாசீர்வாதம் கூறுமேன் ;
உம் வார்த்தை கேட்டோர் மனதில் 
பேரன்பின் அனல் மூட்டுமேன் ,
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே , பிரகாசியும் .

2. இன்றெங்கள் செய்கை யாவையும் 
தயாபரா , நீர் போக்கினீர் ;
எல்லாரின் பாவம் தவறும் ,
மா அற்பச் சீரும் அறிந்தீர் ,
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .

3. எப்பாவத் தீங்கிலிருந்தும் 
விமோசனத்தைத் தாருமேன் ;
உள்ளான சமாதானமும் 
சுத்தாங்கமும் உண்டாக்குமேன் .
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .

4. சந்தோஷம் பயபக்தியும் 
நீர் நிறைவாக ஈயுமேன் ;
உமக்கொப்பாக ஆசிக்கும் 
தூய்மையாம் உள்ளம் தாருமேன் .
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .

5. தரித்திரம் துன்பம் பாவத்தால் 
இக்கட்டடைந்த யாரையும் 
கண்ணோக்கும் மா கிருபையால் ;
நீர் மீட்பர் , நீர் சமஸ்தமும் 
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .     ஆமேன் .


No comments:

Post a Comment