Nal Meetpare Innerathil
1. நல் மீட்பரே இந்நேரத்தில்
வந்தாசீர்வாதம் கூறுமேன் ;
உம் வார்த்தை கேட்டோர் மனதில்
பேரன்பின் அனல் மூட்டுமேன் ,
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே , பிரகாசியும் .
2. இன்றெங்கள் செய்கை யாவையும்
தயாபரா , நீர் போக்கினீர் ;
எல்லாரின் பாவம் தவறும் ,
மா அற்பச் சீரும் அறிந்தீர் ,
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .
3. எப்பாவத் தீங்கிலிருந்தும்
விமோசனத்தைத் தாருமேன் ;
உள்ளான சமாதானமும்
சுத்தாங்கமும் உண்டாக்குமேன் .
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .
4. சந்தோஷம் பயபக்தியும்
நீர் நிறைவாக ஈயுமேன் ;
உமக்கொப்பாக ஆசிக்கும்
தூய்மையாம் உள்ளம் தாருமேன் .
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் .
5. தரித்திரம் துன்பம் பாவத்தால்
இக்கட்டடைந்த யாரையும்
கண்ணோக்கும் மா கிருபையால் ;
நீர் மீட்பர் , நீர் சமஸ்தமும்
வாழ்நாளிலும் சாங்காலத்தும் ,
ஆ , இயேசுவே பிரகாசியும் . ஆமேன் .